இன்று பிற்பகல் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்பு!
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தகவல், இன்று (23.08.2025) வெளியிடப்பட்டுள்ள நாளாந்த வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக அளவில் ஓரளவான பலத்த மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.