இன்று பகல் 2 மணிக்கு பின் கடும்மழை பெய்வதற்கான வாய்ப்பு!
இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வுகூறியுள்ளது.
இது குறித்து திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள நாளாந்த வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தீவின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
