இலங்கையின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் வழங்கல் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பேலியகொட, வத்தளை, ஜா-எல, சீதுவை நகர சபை பகுதிகள் , களனி, பியகம, மஹர,  தொம்பே, கட்டான, மினுவாங்கொடை,   கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் ஆகியன நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.