அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்புக்கான அமைச்சரவை ஒப்புதல்! வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் அரச ஊழியர்களை பெருமளவில் ஆட்சேர்ப்பு செய்யும் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரச துறையின் ஆட்சேர்ப்பு செயன்முறைகள் மற்றும் பணியாளர் மேலாண்மையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில், 15,073 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயன்முறை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.