இரண்டு பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் உள்ள 21ஆவது மைல் கல் அருகே இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து, இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

மேலும், இந்த விபத்துடன் தொடர்புடைய மேலதிக தகவல்களை கண்டறிவதற்காக பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.