அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு முறையான திட்டத்தை வகிக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இந்த கருத்தை தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் ஆங்கில ஊடகத்துக்கு தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கம் அரிசி, மரக்கறிகள், சீனி, பருப்பு மற்றும் மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை அடையாளம் கண்டுபிடித்து, பண்டிகைக் காலம் முழுவதும் அவற்றின் விலை நிலைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
"ஏற்கனவே குறித்த பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பண்டிகைக் காலத்திற்காக வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சில் எந்தத் திட்டமும் இல்லாததாக நான் கருதுகிறேன். அவர்கள் உடனடியாக ஒரு திட்டத்தைத் தயார் செய்ய வேண்டியது அவசியம்" என்று அவர் தெரிவித்தார்.
