பல பகுதிகளில் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள்,  அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும், வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும்,  இந்த நிலைமையால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பொதுமக்கள் தயார் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில், பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில்,  பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.