அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி - 32 பேர் காயம்
மொனராகலை வெலியாய பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநராக செயற்பட்ட தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலாவிற்கு சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.