இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கான உயர்வான தொகைகள் இம்மாதம் (ஜூலை) முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, ஜூலை மாத ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இதற்கமைய, ஓய்வுபெற்ற அரச ஊழியர்களில் 500,000-க்கும் மேற்பட்டோர் இந்த உயர் ஓய்வூதியத்திற்குத் தகுதியாளர்களாக இருப்பதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.