வடமாகாணத்தில் அடிக்கடி மழை பெய்வதற்கான வாய்ப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை பூராவும் படிப்படியாக தென்மேற்கு பருவமழை நிலைபெற்று வருவதாக இன்றைய தினம் (20.05.2025) வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதன்படி மேல், சப்ரகமுவ, காலி, மாத்தறை, புத்தளம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ. அளவிலான பலத்த மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமெனவும் கிழக்கு மாகாணத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேற்கு, வடமத்திய, வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில், மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றால் ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்க்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.