நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும், மூடப்படும் என மதுவரித் திணைக்களம் (Excise Department of Sri Lanka) அறிவித்துள்ளது. இந்தக் காலத்தில், பொது மக்கள் போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடுகளை 1913 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் குறித்த இலக்கம் 24 மணிநேரமும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில், சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படுமென மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பேருந்து சங்கம், நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
அவர்கள் மேலும், சம்பந்தப்பட்ட உணவகங்களில் சுகாதார முறையில் உணவுகள் இல்லை என்றும், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் தரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.