இன்று முதல் தடையின்றி லாஃப்ஸ் எரிவாயு: சந்தைக்கு சிலிண்டர்களை வெளியிட நடவடிக்கை.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு தொகுதியை ஏற்றிச்சென்ற கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் உடனடியாக சந்தைக்கு எரிவாயு தொகுதி வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
உள்நாட்டு நுகர்வோர் இன்று முதல் வழக்கம் போல் லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் மூலம் தேவையான எரிவாயு சிலிண்டர்களை வாங்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர்கள் இன்று (28) வழக்கம் போல் சிலிண்டர்களை வாங்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை
