கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய நிலைமை தொடர்பாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் மின்னலால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:
இலங்கை
