வரலாற்றில் அதியுச்ச நிலையை அடைந்த தங்கவிலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது என சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் ரூ.8,000 வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (07) தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் பவுண் தங்கத்தின் விலை ரூ.290,500 ஆக உயர்ந்துள்ளது.
இது, கடந்த வெள்ளிக்கிழமை ரூ.283,000 ஆக விற்பனையானதைவிட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
அதேவேளை, கடந்த வாரம் ரூ.306,000 ஆக இருந்த 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று ரூ.314,000 ஆக உயர்ந்துள்ளது.
Tags:
இலங்கை