நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு!
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையும், கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில், இப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:
இலங்கை