இலங்கையில் மீண்டும் உச்சந்தொட்ட தங்கவிலை!

உள்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்நிலையைத் தாக்கியுள்ளது. அதன்படி, கொழும்பு புறக்கோட்டை சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று ரூ.337,600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, நேற்று (திங்கட்கிழமை) ரூ.319,000 ஆக விற்பனையானதை விட கணிசமான உயர்வாகும்.

இன்று (14) காலை 10:30 மணி நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.337,600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நேற்று (திங்கட்கிழமை) 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.345,000 ஆக இருந்த நிலையில், இன்றையதினம் அது ரூ.365,000 ஆக உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.