விவசாயிகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயம் ஆகியவை, விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் கொள்முதல் செய்ய, லங்கா சதோசா மற்றும் நாட்டின் முக்கிய வணிக நிறுவனங்களான கார்கில்ஸ் மற்றும் கீல்ஸ் ஆகியவற்றுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நிறுவனங்கள், ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ.210க்கு, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை ரூ.130க்கு மற்றும் ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தை ரூ.225க்கு கொள்முதல் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.

விவசாயிகளிடமிருந்து இந்தப் பொருட்கள் இன்று (02) முதல் கொள்முதல் செய்யப்படத் தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

மேலும், ஒரே ஒரு விவசாயியிடமிருந்து அதிகபட்சம் 2,000 கிலோகிராம் வரை இந்த நிறுவனங்கள் பெற முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்..