இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை குறித்து வெளியான அறிவிப்பு!
இந்தியப் பெருங்கடலில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின் படி, இந்த நிலநடுக்கம் இன்று (01) அதிகாலை ஏற்பட்டுள்ளது.
இது மக்கள் வசிப்பதில்லாத பகுதியில் ஏற்பட்டுள்ளதனால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிப்பதில்லாத கடல் பகுதியாக இருப்பதால், உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகள் எவ்வித அச்சுறுத்தலிலும் இப்போது உள்ளதாக இல்லை என பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதனை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் உள்ள டெக்டோனிக் தட்டு (Tectonic Plate) எல்லைகளுக்கு அருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும். இப்பகுதியில் இத்தகைய நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்படுவது இயல்பான ஒன்றாகும் என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
.jpeg)