வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில், அடுத்த சில நாட்களில் மாலைக்குத் தாட்காலிகமாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ன்று (09) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவது, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் குருநாகல், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில், இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.
சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதால், அதன் தாக்கத்தை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.