நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இன்று (05) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டு மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30–40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அத்துடன், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.