கொழும்பு வாழ் மக்களுக்கு நீர்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை, கொழும்பில் 9 மணிநேரத்திற்காக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை வழங்கும் பிரதான குழாயில் உள்ள பம்பிங் நிலையத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட வேண்டியிருப்பதனாலே, இந்த இடைநிறுத்தம் அவசியமானதாக அமைந்துள்ளது.
இதற்கமைய, காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை குறித்த பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என சபைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐடிஹெச், கொட்டிக்காவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை மற்றும் மொரட்டுவ உள்ளிட்ட பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
