இன்று மூன்று பேருந்துகள் ஒன்றுடனொன்று மோதி ஏற்பட்ட விபத்து

இன்று (11) காலை, கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில், மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.

பெல்மதுளையிலிருந்து பலாங்கொடை நோக்கி பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து, பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து மற்றும் அதே திசையில் பயணித்த மற்றொரு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று விரைவாக வந்ததை அடுத்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறு காயமடைந்த பிற பயணிகளை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த விபத்துக்காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதி சற்று நேரம் முழுமையாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்வகையில் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.