நாட்டில் வங்கி இணையத்தள மூலம் 600 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் செயற்பட்டு வரும் ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தை போலக் கணக்காக உருவாக்கப்பட்ட போலி இணையதளங்கள் மூலம், 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முறையாக முன்னிலைப்படுத்த வேண்டும் என, கொழும்பு தலைமை நீதிபதி அசங்க போதரகம, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்னிலைப்படுத்திய கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு தலைமை நீதிபதி அசங்க போதரகம, இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
இலங்கையில் உள்ள பிரபலமான ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போலவே உருவாக்கப்பட்ட போலி இணையத்தளங்களின் மூலம் தனிநபர்களை ஏமாற்றி, பெரும் அளவிலான பண மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் குற்றவாளிகள் குழு ஒன்று, குறிப்பிடப்பட்ட தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போலவே உருவாக்கிய போலி இணையத்தளத்தின் மூலம், வங்கியின் வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக, புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் குற்றவாளிகள் குழு ஒன்று, குறிப்பிடப்பட்ட தனியார் வங்கியின் இணையத்தளத்தை ஒத்த வகையில் போலி இணையத்தளத்தை உருவாக்கி, வங்கியின் வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளதாக புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பிறகு, கொழும்பு தலைமை நீதவான் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்வைக்கவும், விசாரணையின் முன்னேற்றம் மற்றும் உண்மைகளை முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாக குறிப்பிடப்படுகிறது.