வடக்கு கிழக்கு உட்பட 09 மாகாணங்களுக்கும் காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் தற்போது போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள சூழ்நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், போதைப்பொருள் பரப்பல் மற்றும் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெரோயின், ஐஸ், கொக்கைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை, இன்று முதல் சம்பந்தப்பட்ட மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த காவல்துறை மா அதிபரின் கைபேசி எண்ணை நேரடியாக அழைத்து, பொதுமக்கள் வழங்க முடியும்.
வழங்கப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.க்கள், தேவையான சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வார்கள்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க, குடிமக்களாக நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பை சிறிலங்கா காவல்துறை மனமுவந்து பாராட்டுகிறது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.க்களின் பெயர்கள் மற்றும் அவர்களது கைபேசி எண்கள் பின்வருமாறு:
மேல் மாகாணம்
சஞ்சீவ தர்மரத்ன - 071-8591991
தென் மாகாணம் தகித்சிறி ஜெயலத் - 071-8591992
ஊவா மாகாணம் மகேஷ் சேனநாயக்க - 071-8592642.
சப்ரகமுவ மாகாணம்
மஹிந்த குணரத்ன - 071-8592618
வடமேற்கு மாகாணம்
அஜித் ரோஹண - 071-8592600
மத்திய மாகாணம்
லலித் பத்திநாயக்க -071-8591985
வடமத்திய மாகாணம்
புத்திக சிறிவர்தன - 071-8592645
வடக்கு மாகாணம்
டி.சி.ஏ. தனபால 071-8592644
கிழக்கு மாகாணம் . வருண ஜெயசுந்தர - 071-8592640