நாட்டில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக    வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று (24) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.     

அதன்படி, குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை சுமார் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.