இன்று நாட்டில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் சேர்ந்து, நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (07.08.2025) வெளியிடப்பட்டுள்ள தினசரி வானிலை அறிக்கையிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில்,  பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், பாதிக்கப்படும் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்க்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.