யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இருவரும் பாதுகாப்பாக மீட்பு
யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இருந்து 40 மற்றும் 50 வயதுடைய இரு கடற்றொழிலாளர்கள் நேற்றைய (05) படகு மூலம் கடற்றொழிலுக்கு சென்றனர். இவ்வாறு தொழிலுக்கு சென்ற இருவரும் திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இதன்போது, படகு பழுதடைந்த நிலையில் இரு கடற்றொழிலாளர்களும் கடலில் தத்தளித்தனர்.
இதையடுத்து, தேடிச் சென்ற கடற்றொழிலாளர்களால் குறித்த இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை