இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பேருந்து சேவைகளின் நேர மாற்றம்

இன்று (25) நள்ளிரவு முதல், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகள், ஒருங்கிணைந்த கூட்டு நேர அட்டவணையின் கீழ் இயக்கப்படவுள்ளதுடன், இந்த நடவடிக்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், பின்வரும் வழித்தடங்களில் இயங்கும் நீண்ட தூர பேருந்துகள் இந்த ஒற்றை அட்டவணை முறையை பின்பற்ற வேண்டும்.

- கொழும்பு – சிலாபம்  

- கொழும்பு – புத்தளம்  

- கொழும்பு – ஆனமடுவ  

- கொழும்பு – எலுவன்குளம்  

- கொழும்பு – கல்பிட்டி  

- நீர்கொழும்பு – கல்பிட்டி  

- கொழும்பு – மன்னார்  

- கொழும்பு – தலைமன்னார்  

- கொழும்பு – குளியப்பிட்டி  

- கொழும்பு – நிக்கவெரட்டிய  

- கொழும்பு – அனுராதபுரம்  

- கொழும்பு – வவுனியா

இத்திட்டத்தின் நோக்கம், பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில், பேருந்து இயக்கங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் சமநிலையாக்கம் செய்யும் என்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு - கிளிநொச்சி, கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - காங்கேசன்துறை, கொழும்பு - காரைநகர் மற்றும் கொழும்பு - துனுக்காய் ஆகிய ரயில் வழித்தடங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு நேர அட்டவணை முறையின் கீழ் இயக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட வழித்தடங்களுக்கான பேருந்துகள், புதிய நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.

மேலும், நான்கரை மணி நேரம் தொடர்ச்சியாக பயணித்த பிறகு, பேருந்து ஓட்டுநருக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என்பதால், அதனை கருத்தில் கொண்டு புதிய நேர முகாமைத்துவ திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், நீண்ட தூரப் பயணங்களில் பயணிக்கும் பயணிகள் சுகாதாரமான உணவுகளை உணவகங்களில் பெறும் வகையில், அவற்றின் தரம் மற்றும் சுகாதார நிலைமைகளை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், தொடர்ந்த கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.