நாடு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


நாடு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் அளவிலான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில், மணித்தியாலத்துக்கு 55-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடமேல் மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நாளுக்குள் பலமுறை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர்மயமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்க்க, பொதுமக்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது