கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு – வானிலை திணைக்களம் எச்சரிக்கை
சப்ரகமுவ மாகாணம், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டரைத் தாண்டிய அளவில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடையிடையே மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்,
திருகோணமலை மாவட்டம் போன்ற இடங்களில் மணித்தியாலத்துக்கு 55–60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக உள்ளூர்மயமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனவும், சேதத்தைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
.png)