டிரம்ப் விதித்த வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றம்

இலங்கையின் மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலை நிர்வாக அதிகாரி ஒருவரை சக ஊழியர்கள் கடந்த (08) இரவு வீட்டுக் காவலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள சுங்க வரி காரணமாக,எதிர்வரும் புது வருடத்துக்கான போனஸ் பணத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்த பிறகு, தொழிற்சாலை நிர்வாகம் புது வருட போனஸ் வழங்க முடியாது என அறிவித்திருந்த நிலையில் ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  

நேற்று மாலை, தொழிற்சாலையின் நுழைவு வாயிலை பூட்டி, தொழிலாளர்கள் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், "புது வருட போனஸ் வழங்கப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்" என திட்டவட்டமாக தெரிவித்தனர். 

இந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் வெலிகம பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கத் தொடங்கி, அப்பகுதியில் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று (09) காலை வரை, தொழிலாளர்கள் தொழிற்சாலையின் நுழைவு வாயலை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.