நாளை நாடாளவிய ரீதியில் GMOA முன்னெடுக்கவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (31) காலை 8.00 மணி முதல் நாடளாவிய வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளும் பங்கேற்கவுள்ளதால், வழக்கமான வெளிநோயாளிகள் மற்றும் சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சுகாதார அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு நியாயமான மற்றும் ஏற்புடைய தீர்வை வழங்கும் பட்சத்தில், வேலைநிறுத்தத்தைத் தொடரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.