சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போது 300,000 க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டி குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்நிலையிலே, அடுத்த 3 மாதங்களுக்குள் இந்த அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக ஆலோசனைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.  

மேலும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வடிவிலான சாரதி அனுமதிப்பத்திரங்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான ஒரு மில்லியன் அட்டைகள் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

அதனைத் தொடர்ந்தும், சாரதி அனுமதிப்பத்திரங்களை நேர்த்தியாக மற்றும் விரைவாக அச்சிட்டு வழங்கும் நோக்கில், ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு அச்சிடும் இயந்திரத்தை நிறுவுமாறு குழுவின் தலைவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.