பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
2026 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மற்றும் பிரிவேனாக்கள் மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் வழங்கும் நோக்கில், அவர்களுக்காக வவுச்சர்கள் வழங்கப்படுவது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணையின் இறுதிக்குள் இந்த வவுச்சர்கள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்டச் சலுகைகள் வழங்கும் நோக்கில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட்ட தொலைபேசி பயன்பாட்டின் (மென்பொருள்) மூலம் ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடு உடன் பாதுகாப்பான முறையில் அச்சிடப்பட்ட வவுச்சர்கள், பயனாளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் எனும் வகையில் பிரதமர் ஹரிணி, மேற்கண்ட திட்டத்தின் கீழ் மாணவர்களை பின்வருமாறு தேர்ந்தெடுக்க முன்னெடுக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இலக்காகக் கொண்டு, கீழ்க்கண்ட வகைபடுத்தப்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது:
- மாணவர் எண்ணிக்கை 250க்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் 644,000 மாணவர்கள்
- 251 முதல் 500 மாணவர்களைக் கொண்ட தோட்டப்புற பாடசாலைகளில் 53,093 மாணவர்கள்
- சிறப்புத் தேவைகள் கொண்ட 30 பாடசாலைகளில் 2,300 மாணவர்கள்
- பிரிவேனாக்களில் கல்வி பயிலும் 30,000 சாதாரண மற்றும் துறவி மாணவர்கள்
மேற்கண்ட எல்லா பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பாக அச்சிடப்பட்ட QR குறியீடு வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளனர்.