நாட்டில் பலதடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியம்!
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12.10.2024) வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீட்டர் அளவுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், மத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை காணப்படலாம்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
