யாழில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் மீதமுள்ள சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இன்று கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது தெரிவித்தார்.
அத்துடன், அடிப்படை சம்பள உயர்வின் முதல் கட்டம் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.
“நாட்டை முன்னேற்றுவதற்கு வலுவான அரசுத்துறை அவசியம். உலகின் அனைத்து முன்னேற்ற நாடுகளுக்கும் வலுவான அரசுத்துறை உள்ளது. அதுபோல நாமும் ஒரு வலுவான அரசுத்துறையை உருவாக்குவோம்,” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை