மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகியதால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு..
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகியதால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு..
மும்பையில் இன்று கனமழை பெய்து வருவதால் கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ் விடயம் தொடர்பில் தெரியவந்தது
இச் சம்பவத்தினை சுதாரித்துக்கொண்ட விமானி விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார்
இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் விமானம் நிறுத்தப்பட்டது என்று தெரிவிக்கபட்டுள்ளது
எனினும் ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாகவும் பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்