நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு


நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில், பிற்பகல் அல்லது இரவின் போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக  

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள தினசரி வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்,  

நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்தின் சில பகுதிகளில்,  

அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் உள்ளதாக  

வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக மற்றும் உள்ளூர்மயமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.