நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
வடமேற்கு மாகாணத்தில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக,
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள தினசரி வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள்,
வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்கள்,
புத்தளம், திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில்,
மணிக்கு 55–60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக உள்ளூர்மயமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால்
ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்க்க, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.